Friday, November 14, 2008

சுரேஷ்

அன்புசால் டி. ஆர்.எஸ் அண்ட் கோவுக்கு வணக்கம்!

பசுமரத்தாணி போன்று என் நினைவினின்று நீங்காது பதிந்துவிட்டவர் ‘குஞ்சண்ணா’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் பெற்ற என் தாய் வழிப் பாட்டனாரான தலைஞாயிறு இராதாகிருட்டினன் சீனிவாசன் அவர்கள். அவரைப் பற்றிய எனது நினைவுப்பதிவுகளை உங்களின் பார்வைக்கு இவ்வூடகத்தின் வாயிலாக பதிப்பிக்க யத்தனிக்கும் முன்..


Hold on! நான் என்ன தமிழ் பரிட்சைலே “என் பார்வையில் பாட்டனார்”ங்கற தலைப்புல, கட்டுரையா எழுதிண்டு இருக்கேன்? வெரி சாரி! அதனாலே, நான் உடனே இயற்றமிழை விட்டுட்டு இயல்புத் தமிழ்லே, நம்ம ஆத்துல பேசற மாதிரி தமிழும் இங்கிலீஷ¤மா கலந்து எழுதற ஸ்டைலுக்கு மாறிடறேன். எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, அதுதான் பெட்டர்.

டி.ஆர்.எஸ் தாத்தாவைப் பத்தின நினைவலைகளுக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன முன்னுரை. அப்படின்னா மொத ரெண்டு பேராக்ராபுக்கு என்ன பேருன்னு கேக்கப்படாது!

எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலே! இந்த செப்டம்பர்லே வெகேஷனுக்கு சென்னை போயிருந்தேன்! அனேகமா வெகேஷன் டயத்துல நம்ம முதல் வட்ட மனுஷாளை (First circle ஹி ஹி! ஸாரி) ஒரு விசிட் அடிச்சுட்டு வர்றது, என் வழக்கம். அப்படி எல்லாருக்கும் அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணிண்டு வரும் போது தான் கிருபா மாமாட்டேருந்து டெலிபோன். ‘மீக்கா’, அவ மச்சினராத்து கல்யாணத்துலே Oடியாடி வேலை செய்யும் போது, வொயர் தடுக்கி கீழே விழுந்து, கால் எலும்பு ஒடிஞ்சு போய், கட்டு போட்டுண்டு, பத்மா சித்தி ஆத்துலே, பெட் ரெஸ்ட்லே இருக்காங்கறது தான் தகவல்! (உஸ்.....எவ்வளவு நீளமான சென்டென்ஸ்!!)

மீக்கான்னா என்னன்னு மண்டையை உடைச்சுக்கறவாளுக்கு ஒரு சின்ன விளக்கம். நானும் ரமேஷ¤ம், எங்க சித்திகளை ராதிகாவோட ஸீரியல்ல வர்ற மாதிரி சித்தீ...ன்னு கூப்பிடாம அவாவா பேரோட அக்கான்னு சேர்த்து தான் கூப்பிடுவோம்! இதுல ‘லOEமி அக்கா’ங்கறது பாசத்தாலே மருவி மீ+அக்கா = மீக்கான்னு ஆயிடுத்து. மீக்கா பத்தின சேதி கேட்டதும் பத்மாக்காவுக்கு போன் பண்ணினேன். எஸ்.வி.எஸ் சித்தப்பா உடனே கார் எடுத்துண்டு வந்து என்னையும் கீதாவையும் அவாத்துக்கு அழைச்சிண்டு போனார்.

மீக்காவோட உடல் நலத்தை ஜாரிச்சுட்டு, ரெண்டு சித்தி, சித்தப்பாக்களோடேயும் பேசிண்டு இருந்தேன். அப்போ திடீர்னு, மீக்காவா பத்மாக்காவான்னு தெரியலை, இந்த வருஷம் தாத்தாவோட சென்டினரி இயர் ஆரம்பம் ஆகப்போறது. இதை நம்ம trsnco குடும்பத்துல செலிபரேட் பண்ணனும். சுரேஷ்! இதுக்கு ஏதாவது ஐடியா குடேன்னா(ர்). அதுக்கப்புறம் பேச்சு பல பாதைகள்லே போனாலும், தாத்தா பத்தின நெனப்பு மட்டும் எம்மனசுலே ஒரு தனி ட்ராக்லே வேகமா பயணிச்சது. சீனு, மீனாட்சிக்கு புள்ளைகள்ங்கற பெருமை இருந்தாலும் நானும் ரமேஷ¤ம் வளர்ந்தது என்னவோ பாட்டி தாத்தா கூட தான்! என் மனசுல ஒசந்த ஸ்தானத்துல பாட்டி இருந்தாலும், தாத்தா என்னை பாதிச்ச, இம்ப்ரெஸ் பண்ணின முதல் சில பேர்கள்லே ஒருத்தரா இருந்தார், இருப்பார்.

தாத்தாவைப்பத்தி யோசிச்ச போது சினிமா டிரெயிலர் மாதிரி, அவரோட பழகின என் சின்ன வயசு ஞாபகங்கள் பலதும் ஸ்லைடுகளா வந்து விழுந்தது. அதையெல்லாம் நம்ம trsncoவுல
இருக்கற எல்லார் கூடவும் பகிர்ந்துண்டா எப்படி இருக்கும்னு ஒரு flash அடிச்சது. உடனே நான் சித்திகள்கிட்டே அக்கா, “நம்ம தாத்தாவோட பழகினவா யாராயிருந்தாலும் அவாளுக்குத் தாத்தாவைப் பத்தி நமக்கெல்லாம் தெரியாத சுவையான சம்பவங்களோ, அபிப்பிராயங்களோ இருந்து, அதை எழுதிக் குடுத்தா தாத்தாவோட நூற்றாண்டு வருஷம் முழுக்க நம்ம blogலே போஸ்ட் பண்ணி எல்லாரோடயும் ஷேர் பண்ணிக்கலாமேன்னேன்.

இதைக் கேட்ட பத்மாக்கா, நல்ல ஐடியாடா, செஞ்சுடலாம்னா(ர்). வி.எஸ்.ஆர், சீதாராமண்ணா மாதிரி பெரியவா கிட்டேயும் பேசி ரெக்கார்ட் பண்ணிட்டோம்னா, அதையும் போஸ்ட் பண்ணலாங்கற ஐடியாவும் OK ஆச்சு. சொன்னதோட நிக்காம உடனே மாமாவை இந்த ப்ராஜக்டுக்கு லீடரா அப்பாயிண்ட் பண்ணி இதை இம்ப்ளிமெண்ட் பண்ண ஏற்பாடுகள் நடந்தது. மீக்கா கூட, ‘நான் ஒடஞ்ச காலோட வெறும்ன படுத்துண்டு தானே இருக்கேன். நான் நாளைக்கே எழுதிடறேன்’னு ஆர்வாமாயிட்டா(ர்).

ரெண்டு நாளைக்கப்புறம் கிருபா மாமாவை சீதாராமண்ணா பையன் ரவி ஆத்துல பாத்தேன். ‘மீக்கா ஏற்கனவே எழுதி முடிச்சுட்டா, நீ சவூதிக்குப் போறதுக்கு முன்னாலே ரெண்டு மூணு
போஸ்ட்ஸ் ரெடியாயிடும்னு நெனைக்கறேன்’னான்(ர்).. நான் இந்த அக்டோபர் முதல் வாரத்துல சவூதி வந்தேன். வந்து, நம்ம ப்ளாக்லே லOEமி சித்தியோட கட்டுரையை படிச்சதும் எனக்கும் உத்வேகம் வந்துட, இதோ எழுத ஆரம்பிச்சுட்டேன். முன்னுரை μவர்.

பயமா? பாசமா?:

டி.ஆர்.எஸ் தாத்தான்னா சின்ன வயசுல எனக்கு கொஞ்சம் பயந்தான். அந்த வயசுல என்னை தாத்தா ரொம்ப கோவிச்சுண்டதில்லைன்னாலும் ஏனோ அவர் மேல பாசத்தை விட பயம் தான் அதிகமிருந்தது. ஏன்னா, பாட்டி, மாமா, அப்பா, அம்மா, சித்திகள்னு பெரியவா எல்லாருமே கூட அப்பல்லாம் தாத்தாவை அந்த மாதிரி பாத்ததா தான் எனக்குப் படறது.

அப்போ எனக்கு 8 வயசு இருக்கலாம்! தாத்தா பாலுசேரி பெனிபிட் சிட் ·பண்ட்லே வேலை பாத்துண்டு இருந்தார். ஒரு நாள் சாயங்காலம் பாலுசேரிக்கு அம்மாப்பாவோட நான் போனேன். ஏதோ சிட் எடுக்கற விஷயமா இருக்கும்னு இப்ப தோணறது! வந்த வேலை முடிஞ்சதும் என்னை தாத்தா கிட்டே விட்டுட்டு அப்பாம்மா வேற யாரையோ பார்க்கப் போயிட்டா. என் வாழ்க்கையிலே, மொத மொதல்ல ஒரு அலுவலகத்தை அன்னிக்குத்தான் பார்த்தேன்னு நெனைக்கறேன்!

அந்த பெரிய ஹால், அங்கே இருந்த அத்தனை ஆட்கள், அவாள்ளாம் வேலை செஞ்ச விதம்னு இப்படி எல்லாமே எனக்கு புதுசாவும் பிரம்மிப்பாவும் இருந்தது. தாத்தாவுக்குப் பக்கத்துலே ஒரு நாற்காலிலே உக்காந்துண்டேன். தாத்தாவுக்கு அங்கே ரொம்ப மரியாதை! எல்லாரும் அவர் சொல்றதை கேட்டு நடந்துக்கறதை பார்க்கப் பார்க்க என் பார்வையிலே தாத்தா பிரசிடெண்ட் ஆப் இந்தியா மாதிரி தெரிஞ்சார். அப்போ தாத்தா ஏதோ லெட்ஜர்லே எழுதிண்டு இருந்தார். GS அப்பா கையெழுத்து அச்சு கோர்த்தா மாதிரி ஒரு அழகுன்னா, தாத்தாவோட சாய்வான, அநாயசமான, free hand எழுத்துக்களும் என்னை வசீகரிச்சிருந்தது உண்மை. திடீர்னு தாத்தா, “டேய்! ஏதாவது குடிக்கறியா?”ன்னு என்னைக் கேட்டார்.

வேண்டாம்னும் இல்லாம வேணும்னு இல்லாம மையமா தலையாட்டினதா ஞாபகம்! ஒரு மாமா காபி கொண்டு வந்து குடுக்க, அந்த இடத்துல உக்கார்ந்துண்டு காபி குடிச்சது இப்பவும் freshஆ நெனைப்பிருக்கறது ஆச்சர்யமா இருக்கு!

வேலை முடிஞ்சதும் ஆத்துக்குப் போற வழியிலே ஒரு பட்டாணி கடையில தாத்தா எனக்கு பத்து பைசாவுக்கு வேர்கடலை வாங்கி கொடுத்தார். ரெண்டு பேரும் நடக்க ஆரம்பிச்சோம்!

அவர் வேகத்துக்கு μட்டமும் நடையுமா அட்ஜஸ்ட் பண்ணி நடந்தேன்! தாத்தா நடக்கற ஸ்டைலே தனி! மீக்கா எழுதியிருந்த மாதிரி தாத்தா வெள்ளை வேஷ்டி, சட்டை போட்டுண்டு கையிலே ஒரு பையோடு வேகமா அவர் நடக்கும் போது, ஒரே சீரா கிளம்பி வர்ற செருப்பு சத்தத்தை மறக்கறது கொஞ்சம் கஷ்டந்தான்!

தாத்தான்னாலே பயம்னு சொன்னேனே, Infact, அன்னிலேருந்து தான் எனக்கு அந்த பயத்தையும் மீறி அவர் மேலே பாசமும், மரியாதையும் ஜாஸ்தியாச்சுன்னு நெனைக்கறேன்.

பாட்டி ரஸமும், கீரைவடையும்.:

அடுத்தது சாப்பாடு சமாச்சாரம்! சிலர் சாப்பிடறதை பார்க்கறதுக்கு வேடிக்கையாவோ இல்லை வேதனையாவோ இருக்கும். ஆனா சிலர் சாப்பிடறது அழகா ரசிக்கும்படியா இருக்கும். என்னைப் பொறுத்தவரை தாத்தா ரெண்டாவது வகையைச் சேர்ந்தவர். சாப்பாடு விஷயத்துலே ரொம்ப மெட்டிகுலஸ். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு கரெக்டா தட்டு, தண்ணீர், பலகா (மரப்பலகை) மூணும் தாத்தாவுக்காக தயாரா இருக்கும். வெய்யில் காலம்னா கை விசிறி கூட பக்கத்துலே இருக்கும். அவர் கை கால் அலம்பிண்டு சாப்பிட உக்காருவார். கொஞ்ச கொஞ்சமா சாதத்தை எடுத்து குறிப்பிட்ட அளவு தொட்டுக்க கூட்டோ/ கறியோ/ குழம்போ சேர்த்துண்டு ரொம்ப லாகவமா/ லாவகமா அவர் சாப்பிடற அழகே தனி!

பாட்டியோட ரஸத்துக்கு கை மணம் அதிகம். (சீனுப்பா கூட மீனாட்சிம்மாட்ட ‘ஒங்கம்மா மாதிரி ரஸம் வைக்க கத்துக்கோ’ம்பார்) தாத்தாவுக்கு ரஸம் சாதம் μட μட இருக்கணும். அவர் ‘ரஸஞ்சாம்’ சாப்பிடும் போது அதுலே இருக்கற பச்சை மிளகாயை எடுத்து நசுக்கி அந்தச் சாரையும் சாதத்துலே சேர்த்துண்டு சாப்பிடுவார். அதை நான் ரசிச்சு பார்ப்பேன்!

அவருக்கு மத்தியானம் காபிக்கு முன்னாடி கொஞ்சம் ‘கற கற’ன்னு முறுக்கு மாதிரி ஏதாவது பட்சணத்தைக் கொறிக்கப் பிடிக்கும். பல் இல்லாததாலே, அவரே அப்பளக்குழவியும் பலகாயும் எடுத்துண்டு வந்து முறுக்கையோ தேங்குழலையோ பொடி பண்ணி வாயிலே போட்டுண்டு ஊறவச்சு சாப்பிடுவார். அதுவும் நான் ரசிச்ச விஷயந்தான். ஆனா, தாத்தா வேற யாராத்துலேயும் அநாவசியமா கை நனைச்சதா எனக்கு தெரியலை.

எங்க அப்பா அம்மா இருந்த லால் பேகம் தெரு ஆத்துக்கு சில நாள் சாயங்காலம் ஆபீஸ்லேருந்து நேரா வருவார். அப்போ ஏதாவது சாப்பிடறியாண்ணா?ன்னு அம்மா கேட்டா, “இப்ப தான் கிளப்லே கீரை வடை சாப்பிட்டேன்! வேணாம்”ன்னுடுவார். எந்த
கிளப்போ - எந்த கீரை வடையோ? யார் கண்டா? பகவானுக்குத் தான் வெளிச்சம்.

அனுபவி! தாத்தா அனுபவி!


அப்போ பி.டி.ஸி நர்ஸரி ஸ்கூல்ல நானும் ரமேஷ¤ம் படிச்சிண்டு இருந்தோம்! வருஷாந்திர விளையாட்டு தினம் மெரினா ஸ்டேடியத்துல நடந்தது. ரமேஷ் வேகமா நடக்கற 100 மீட்டர் Swift walking raceலே கலந்துண்டான். GS அப்பாவும் தாத்தாவும் கூட அந்த போட்டியை பார்க்க அங்கே வந்திருந்தா! போட்டி ஆரம்பிச்சுது. ரமேஷ் எடுத்த உடனே ரொம்ப வேகமா நடந்து பலரை முந்திண்டு போகும் போது, தாத்தா ரெண்டு கையையும் தூக்கிண்டு ஹேய்ன்னு சத்தம் போட்டு என்கரேஜ் பண்ணினார். ரேஸ் முடியும் போது நெறைய பசங்க வின்னிங் ரோப் கிட்டே கும்பலா கூடிட்டாங்க. தாத்தா ரமேஷ் “மூணாவது இடம் - 3rd place, 3rd place”ன்னு சந்தோஷமா வாய் விட்டு கத்தி கை தட்டி குதூகலிச்சது இப்பவும் என் கண்ணுக்குள்ள நிக்கறது. ஆனா ரமேஷ் ரேஸ¤ல மூணாவதா வர்றலை, ரெண்டாவதா வந்திருந்தான்னு மைக்லே அறிவிச்சதைக் கேட்டதும், தாத்தாவோட சிரிப்பும் சந்தோஷமும் இன்னும் ஜாஸ்தியாச்சு. அன்னிக்கு அங்கே நடந்த fancy dress போட்டிலே ரமேஷ் குடுகுடுப்பைக்காரன் வேஷம் போட்டு முதல் பரிசும் வாங்கினான். அது இன்னும் அவர் சந்தோஷத்தை அதிகமாக்கித்து. எப்பவும் ஸ்டிரிக்டாவும், ஜாஸ்தி பேசாமலுமே இருக்கற தாத்தாவைப் பார்த்து பழகிப் போன எனக்கு அவர் அன்னிக்கு குழந்தை மாதிரி சந்தோஷமா சிரிச்சு என்ஜாய் பண்ணினதை மறக்கவே முடியாது.
தாத்தா குழந்தைகளாலே டென்ஷன் ஆனா ‘அடடாடாடா..’ ன்னு சொல்றதாலே அவருக்கு “அடடா தாத்தா”ன்னும் செல்லப் பெயர் கிடைச்சதுங்கறது நமக்குத் தெரியும். ஆனா, காலப்போக்கிலே, தாத்தா பேரன் பேத்திகளோட லெவலுக்கு வந்து அவாளோட விளையாடி “டம் டம் தாத்தா”ன்னு பேர் வாங்கினதை நெனைச்சுப் பார்க்க நெகிழ்ச்சியாயிருக்கு.

ஆட்டமா? சீட்டாட்டமா?

என்னை மாதிரியே தாத்தாவுக்கும் சீட்டுக்கட்டு ஆடறது பிடிக்கும். அதுலேயும் தாத்தாவும் பாட்டியும் டிக்ளேர் (10 கார்டு ரம்மி) ஆடறது ரொம்ப சுவாரஸ்யமானது. என்னிக்காவது ரெண்டு மூணு ஆட்டம் தொடர்ந்து பாட்டி டிக்ளேர் செஞ்சுட்டா, அவர் அப்ஸெட் ஆறதை பாக்கணுமே! எனக்கு அது தனி குஷி. தான் ஜெயிச்ச அப்புறமாத்தான் அன்னிக்கான ஆட்டத்தை நிறுத்துவார்.

சமயத்துல, பாட்டி பிஸியா இருந்தா தாத்தா மட்டும் சீட்டுலே patienceங்கற ஆட்டத்தை ஆடுவார். அதுலேயும் 4 செட்டும் முடியற வரைக்கும் விடாம ஆடிண்டே இருப்பார். அது முடிஞ்சுதுன்னாத்தான், சீட்டுக்கட்டைத் தூக்கி μரமா வச்சுட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவார். இந்த டிக்ளெர்லேயும் பேஷன்ஸ்லேயும் தாத்தா கிட்டே வெளிப்பட்டு என்னை இம்ப்ரெஸ் பண்ண விஷயங்கள் என்னன்னா, அவரோட involvement, concentration & Perseverance - இந்த மூணும் தான். துன்பம் நேர்கையில் சந்தோஷ காலத்துலே மட்டுமில்லாம, துக்க காலங்கள்ளேயும் அவரோட அருகாமையும் வழி காட்டுதலும் கிடைச்சது என் பாக்கியம் தான்.

'G.S’ன்னும், ‘சீனு மாமா’ன்னும் நம்ம சர்க்கிள்லே அன்பா அறியப்பட்டவர் தான் எங்கப்பா. டி.ஆர்.எஸ். தாத்தா அவரை மருமகனா நெனைக்காமே, தன்னோட முதல் மகனாத்தான் நெனைச்சிருந்தார். மீனாட்சிம்மாவுக்கோ சீனு மாமா தான் சகலமும்! அந்த சீனு மாமா, செப்டம்பர் 1986லே எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு அகாலமா காலமானார்!

அந்த பேரிழப்புக்கு அப்புறம் தொடர்ந்த மறக்க முடியாத துக்ககரமான நாட்களை நான் இப்போ நெனைச்சுப் பார்க்கறச்சே கூட தொண்டைக்குள்ள ‘லம்ப்’பா எதுவோ வந்து அடைக்கறது. ஆனா தாத்தாவும் பாட்டியும் அந்த சமயத்துலே தொடர்ந்து அஞ்சுகம் நகர் ஆத்துலே, எங்க கூடவே சில மாசங்கள் தங்கி, பெரிய moral supportஆ இருந்ததுக்கு நான் அவா ரெண்டு பேருக்கும் என்னென்னிக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

நாங்களாவது பரவாயில்லே! கொஞ்ச நாள்லே தேறிட்டோம்! ஆனா ஆத்துக்காரார் தான் எல்லாமேன்னு வாழ்ந்துண்டிருந்த மீனாட்சிம்மா அவர் போன அதிர்ச்சியை தாங்க முடியாம, டிப்ரஷன்லே போய் விழுந்து அவதிப்பட்டது பெரியவா பலருக்குத் தெரியும்! அவளை, அந்த மன இறுக்கத்துலேருந்து கொஞ்சம் கொஞ்சமா மீட்டு மறுபடியும் ஆபீஸ் போக வச்சது பாட்டியும் தாத்தாவும் தான். தங்களோட துக்கத்தை மனசுக்குள்ளே ஆழமாப் பொதைச்சுண்டு பாட்டியும் தாத்தாவும் எங்களுக்கு ஆறுதலும் அமைதியும் தந்து தேத்தினது பெரிய விஷயம்!

ஆனா 1994லே மீனாட்சிம்மா, நம்மளையெல்லாம் விட்டுட்டு நிரந்தரமா போனபோது தாத்தா பாட்டி ரெண்டு பேருமே சுக்கல் சுக்கலா ஒடைஞ்சு போனதைப் பார்க்க வேதனை பொங்கித்து. மீனாட்சிம்மா, வியாதி காரணமா கிட்டத்தட்ட ஆறு மாசம் தாங்க முடியாத வலியையும் அவஸ்தையை அனுபவிச்சா. தாத்தா பாட்டி கூட இருக்கறதுக்கு வசதியா அவளை கிருபா மாமா தன்னோட கே.கே.நகராத்துக்கு அழைச்சிண்டு போய் வச்சுப் பார்த்துண்டார். மாமா, மாமி, தாத்தா, பாட்டி, சித்தி-சித்தப்பாக்கள்னு எல்லாரும் அந்த காலகட்டத்துலே அம்மாவுக்கு சிசுருக்¨க்ஷ பண்ணினதை என் வாழ்நாள்லே மறக்க முடியாது.

ரொம்ப உணர்ச்சி வசப்படறேன் இல்லே? ஆனா அது தான் உண்மை!

சதாபிஷேகம்:

ரொம்ப சென்டிமெண்டா இந்த நினவுப்பதிவுகளை எழுதி முடிக்கறது சரியில்லைன்னு பட்டதாலே சந்தோஷமா நிறைவு செய்ய நான் செலக்ட் பண்ணினது தாத்தாவோட சதாபிஷேக கொண்டாட்டங்களைத்தான்.

நான் சம்சாரியானதுக்கப்புறம் நம்மாத்துலே நடந்த பெரிய கோலாகலமான விசேஷம் அது.

trsncoவுலே அன்னிக்கு இருந்த எல்லாரும் கலந்துண்டு நடத்திக்கொடுத்த சிறப்பான அந்த வைபவத்தை நெனைக்க நெனைக்க சந்தோஷம் தான். இன்னி தேதிக்கு கல்யாணமாயிட்ட
பலர் அன்னிக்கு நண்டும் சிண்டுமா இருந்தா. சதாபிஷேகம் நடந்த மிதிலா கல்யாண மண்டபத்துலே, அன்னிக்கு சாயங்காலமா டி. ஆர். எஸ் தாத்தாவோட பேரன் பேத்திகளை வச்சு ஒரு நாடகம் போட்டோம்! நாடகம் μஹோன்னு பேர் வாங்கித்து! அதுக்கான ஸ்கிரிப்டை நான் எழுதி இயக்கியிருந்தாலும், அதுலே பங்கெடுத்துண்ட எல்லாருமே தான் அந்த வெற்றிக்கு காரணம். அவா எல்லாருமே ரொம்ப ரொம்ப டேலண்டட். குறைவான ஒத்திகைகளிலேயே ஒருத்தர் கூட சோடை போகாம சிறப்பா நடிச்சிருந்தா. அந்த நாளையும், பெசண்ட் நகர்லே மதுக்காவாத்து மொட்டை மாடிலே அதுக்கான ஒத்திகைகள் ரொம்ப ரகளையா சந்தோஷமா நடந்த நாட்களையும் அப்ப அனுபவிச்ச யாராலேயும் லேசுல மறந்துட முடியாதுன்னு அடிச்சு சொல்வேன்!


என் வாழ்க்கைப் புஸ்தகத்துலே ஒரு சிறப்பான அத்தியாயமா இருந்த தாத்தாவைப் பத்தி இன்னும் நெறையா எழுதலாம். ஆனா சட்டுன்னு நெனைவுக்கு வந்த, என்னை பாதிச்ச சம்பவங்களை உங்களோட சந்தோஷமா பகிர்ந்துண்டேன்னு நெனைக்கறேன்.

அப்பேர்ப்பட்ட தாத்தா பாட்டி காரணமா அமைஞ்சிருக்குற trsncoவுலே நானும் ஒரு அங்கம்ங்கறதை சொல்லி பெருமைப் படறேன்! இந்தப் பதிவு வெளி வர்றதுக்கு உதவி பண்ண கிருபா மாமாவுக்கு என் ஸ்பெஷல் தாங்க்ஸ்!

நமஸ்காரம்! / ஆசீர்வாதம்!
சுரேஷ் சீனு,
சவூதி அரேபியா

4 comments:

Kiruba said...

பகுத் அச்சா

கிருபா

ARUNACHALAM said...

Suresh very good. Nee andha kalathhil inge oru kal ange oru kal ena vaithu, keezhe utkarndhu irrupavargalai idithukondu pogum bodhu, thathavidam thittu vangu vazhakkam unakku gyabagam irrukkum ena ninaikiren. Adhu oru porkalam.

suresh seenu said...

கிருபா மாமாவுக்கு:
ஷுக்ரன் ஜசீலன்! (அரபியில் – ‘மிக்க நன்றி’)

பாலுண்ணாவுக்கு:
நன்றி! நீ எழுதியிருக்கற மாதிரி அந்த காலத்துலே யார் மேலேயும் இடிக்காமலோ, எதுலயாவது இடிச்சுக்காமலோ நடந்தது ரொம்ப கம்மி. அந்த மாதிரி நேரங்கள்லே தாத்தா கிட்டே மட்டும்னு இல்லே, சகலமான பெரியவா கிட்டே இருந்து திட்டு வாங்கியிருக்கேன். அந்த திட்டுகள் என்னை கொஞ்சம் கூட பாதிச்சதில்லை. துளி கூட சொரணையில்லாம எது மேலெயோ மழை பேஞ்ச மாதிரி போயிண்டே இருப்பேன். போற வழியிலே மறுபடியும் முட்டிண்டும் மோதிண்டும் தான் நடந்திருப்பேன். இப்ப நெனைச்சுப் பாத்தா சிரிப்பு தான் வருது. ரிமைண்ட் பண்ணதுக்கு தாங்க்ஸ்.

கால ஓட்டத்துலே சரியா நடக்க கத்துண்டுட்டேனா இல்லையான்னு தெரியலை. ஆனா, ஒண்ணு நிச்சயம். அடுத்த வாட்டி இடிச்சிண்டேன்னா, நிச்சயம் ஒன் கமெண்ட்ஸ் ஞாபகத்துக்கு வரும்.

suresh seenu said...

Dear Krithika & Padmakka,

Thanks for your comment in our trsnco email.

Padmakka:
I am recording this reply in the blog instead of e-mail, since balunna had shown you the way to check comments in our blog

I just wrote what came to my mind and am sure that everyone who had been closely associated with thathaa will have more such interesting things about him.

I sincerely urge all to try and expedite posting their articles in our blog and achieve success in our mission.